சென்னை : கடந்த 2009ம் ஆண்டு குழந்தைகளை மையமாக வைத்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி வெளியான திரைப்படம் தான் பசங்க. இந்த படம் இயக்குனர் பாண்டிராஜின் முதல் திரைப்படமாகும். இந்த படம் அவருக்கு மட்டுமல்லாது விமல் போன்ற நல்ல நடிகர்கள் உருவாவதற்கு ஒரு அச்சாணியாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், தேசிய விருதுகள், மாநில விருதுகள் என பல விருதுகளையும் அந்த படம் அள்ளி குவித்தது. அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் குழந்தைகளை மையமாக வைத்து அதிக படம் வந்துள்ளது. கடந்த 2013ம் ஆண்டு பசங்க 2 என்ற பெயரில் பாண்டிராஜ் மீண்டும் மாறுபட்ட கதைக்களத்தில் குழந்தைகளை மையமாக வைத்து ஒரு படம் இயங்கினார்.
அப்படமும் ரசிகர்களிடையே ஒரு பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது, பாண்டிராஜ் ‘பரிமளா அண்ட் கோ’ என்ற படத்தை இயக்கி இருக்கிறார். அப்படம் இந்த ஆண்டு வருகின்ற ஜூன் 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இப்படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குனர் பாண்டிராஜ் தான் பசங்க 3 கதையை எழுதி ரெடியாக வைத்திருப்பதாக கூறி இருக்கிறார்.
மேலும், விரைவில் அந்த கதையை அல்லது வெப் சீரிஸ் ஆகவோ எடுக்க போவதாகவும், அதில் பசங்க படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் விமல் மற்றும் வேகா உள்ளிட்டோரும் நடிப்பார்கள் என அவர் கூறியிருக்கிறார். இதனால், தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.





