‘ஆயிரத்தில் ஒருவன்-2’ வேண்டாம், செல்வராகவன் வேண்டாம் – நடிகை ஆண்ட்ரியா!

கடந்த 2010-ல் இயக்குநர் மற்றும் நடிகர் செல்வராகவன் இயக்கி கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா, பார்த்திபன் உள்ளிட்டோர் நடித்து திரைக்கு வந்த படம், ‘ஆயிரத்தில் ஒருவன்’. ட்ரீம் வேலி கார்ப்பரேஷன் ரவீந்திரன் தயாரித்த இந்த படத்திற்கு நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்தார்.  தமிழ் சினிமாவின் இது வரை செய்திடாத ஒரு வித்தியாசமான முயற்சி இந்த திரைப்படமாகும்.

கற்பனை கலந்த பல ஸ்வாரஸ்யமான திகிலூட்டும் காட்சிகள் அமைந்த திரைக்கதையும், அதற்கு ஏற்ற நடிகர்களின் எதார்த்த நடிப்பும், இந்த இரண்டையும் பிண்ணி பிணைக்கும் ஜி.வி.பிரகாஷின் இசையும் இப்படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்ப்பவை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2010 ம் ஆண்டு இப்படம் வெளியான போது வரவேற்க தவறியத் தமிழ் சினிமா ரசிகர்கள், கடந்த 2019 மற்றும் 2021-ல் இப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட போது அதே ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றது.

அதன்பிறகு இந்த படத்தில் பணியாற்றிய படக்குழுவினர் எங்கு சென்றாலும் இதற்கான இரண்டாம் பக்கம் எப்போது வரும் என்ற கேள்வி கேட்க படாமல் இருக்கமாட்டார்கள். அப்படி அந்த சமயம் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குநர் செல்வராகவன் கூறுகையில், ‘இதற்கான 2ம் பாகம் உருவாக்கப்படுவது எனது கையில் மட்டுமில்லை, அனைவரும் இணைய வேண்டும்’ என்று கூறியிருந்தார். அதற்கு முக்கிய காரணம் நடிகர் கார்த்தி இல்லாமல் ஆயிரத்தில் ஒருவன்-2 சாத்தியமில்லை என்பது தான்.

கார்த்தி மட்டுமின்றி ரீமாசென், குறிப்பாக நடிகை ஆண்ட்ரியா இல்லாமல் இதனது இராண்டாம் பாகம் எடுக்க முடியாது. இருப்பினும் அதனைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் இந்த இரண்டாம் பாகத்தில் நடிக்க போகிறார் என செய்திகள் வெளியாகின. மேலும், சமீபத்தில் கூட செல்வராகவன் இந்த இரண்டாம் பாகத்தின் திரைக்கதையை முழுவதுமாக முடித்து விட்டேன் என அவரது சமூக தள பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

இதனால், இப்படத்திற்கு ரசிகர்களிடம் மேலும் எதிர்பார்ப்பு கூடியது. இந்த நிலையில் முதல் பாகத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகை ஆண்ட்ரியா இந்த 2-ம் பாகத்தில் நடிக்க மாட்டேன் தற்போது கலந்து கொண்ட ஒரு நேர்காணலில் என கூறியிருக்கிறார். அவர் ஒரு நேர்காணலில் பேசியபோது, “ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்த அனுபவங்களை எப்போதுமே மறக்க முடியாது.

சுமார் 200 நாட்களுக்கு மேல் எடுக்கப்பட்ட படப்பிடிப்பில் அனைவரும் அதிகமாக கஷ்டப்பட்டோம். இப்படத்துக்கு பிறகு எந்த படத்தில் நான் நடித்தாலும் சுலபமாகவே இருந்தது. அதுவே செல்வராகவனுடன் பணியாற்றுவது மிகவும் கடினம். அதனால், ஆயிரத்தில் ஒருவன் 2வது பாகத்தில் நான் நடிக்க மாட்டேன்”, என கூறியிருந்தார்.

Related Posts

“படம் பார்த்தால் புரியும்” சர்ச்சைக்கு முற்றிப் புள்ளி வைத்த நட்டி !!

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகரும், ஒளிப்பதிவாளருமான நட்டி ‘நடராஜன்’ நடித்த ‘TN 2026 – தங்க நட்சத்திரம்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியிருந்தது. நடிகர் தம்பி ராமையாவின் மகனான உமாமபதி ராமையா இத்திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல்-10…

“விஜய்க்கு பதில் இவர் அரசியலுக்கு வரலாம்”- ஜேம்ஸ் வசந்தன்

நடிகரும், தவெக தலைவருமான விஜய் கட்சி தொடங்கியது முதலே சினிமாத்துறையில் பலர் வரவேற்பும், நேர்மறையான விமர்சனங்களையும், எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர். மேலும், ஒரு சிலர் விஜய் அவர்களை விமர்சனம் செய்து தங்களது இமேஜை உயர்த்தி கொள்ள முயற்சி செய்கின்றனர். ஆனால் அதற்கெல்லாம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

‘ஆயிரத்தில் ஒருவன்-2’ வேண்டாம், செல்வராகவன் வேண்டாம் – நடிகை ஆண்ட்ரியா!

  • By Ahil
  • April 7, 2026
  • 2 views
‘ஆயிரத்தில் ஒருவன்-2’ வேண்டாம், செல்வராகவன் வேண்டாம் – நடிகை ஆண்ட்ரியா!

“படம் பார்த்தால் புரியும்” சர்ச்சைக்கு முற்றிப் புள்ளி வைத்த நட்டி !!

  • By Ahil
  • April 4, 2026
  • 3 views
“படம் பார்த்தால் புரியும்” சர்ச்சைக்கு முற்றிப் புள்ளி வைத்த நட்டி !!

“விஜய்க்கு பதில் இவர் அரசியலுக்கு வரலாம்”- ஜேம்ஸ் வசந்தன்

  • By Ahil
  • April 4, 2026
  • 15 views
“விஜய்க்கு பதில் இவர் அரசியலுக்கு வரலாம்”- ஜேம்ஸ் வசந்தன்